என் மலர்
நீங்கள் தேடியது "Cow attacks"
- ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது.
- 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டை பிடித்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஜலாலாபாத் நகரில் முக்கிய சாலை ஒன்றில் காளை மாடு ஒன்று திடீரென்று ஆவேசமாக ஓடியது. அந்த மாடு சாலையில் சென்றவர்களை விரட்டி சென்று முட்டியது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
ஒரு வாலிபரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் மாடு முட்டி தாக்கியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த மாட்டை பிடிக்க நகராட்சி ஊழி யர்கள் முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிய மாடு சாலையில் வேகமாக ஓடியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாட்டை பிடித்தனர். சில நாட்களுக்கு முன்பு கிரேட்டர் வெஸ்ட் பகுதியில் மாடு ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அதை ஓட்டி வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் பதான் தொகுதி எம்.பியாக உள்ள லீலாதர் வகேலா மாடு முட்டியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். #BJP
அகமதாபாத்:
பா.ஜ.கவை சேர்ந்த எம்.பி. லீலாதர் வகேலா (வயது 83). குஜராத்தின் படான் தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அங்கு தெருவில் சுற்றி திரிந்த பசு ஒன்று இவரை முட்டி தாக்கியுள்ளது. தனது கைக்குட்டையால் பசுவை விரட்ட அவர் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இதனால் அவருக்கு இரு இடுப்பு எலும்புகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து காந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வகேலா சேர்க்கப்பட்டு உள்ளார். மூச்சு விடுவதற்கு அதிக சிரமம் உள்ளது என கூறிய அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.






