search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "COUNSELING MEETING"

    • விக்கிரமங்கலத்தில் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் விக்கிரமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் பாண்டி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் உசிலம்பட்டி நகர்மன்ற உறுப்பினருமான பிரகதீஸ்வரன், அம்மா தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் நிலையரசி, மாவட்ட பேரவை தலைவர் செந்தில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தமிழ்ச்செல்வன், பால்சாமி, ராஜா, வாலிப்பாண்டி, மணிகண்டன், சீர்காளன், மலேசியா பாண்டியன், குணசேகர பாண்டியன், ராமகிருஷ்ணன், ரகுபதி, ஜெயக்கொடி, பெரியகருப்பன், மணிமாறன், முத்தையா, பிரபு, பாலசுப்பிரமணியன் மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது
    • உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ம்வகுப்பு முடித்துசென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்துப்பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பி இருந்தது. இதன் அடிப்படையில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளித்தலைமையாசிரியர் நவநீதகிருஸ்ணன் தலைமைவகித்தார். ஆசிரியர்கள் ரமேஸ் கண்ணதாசன் செம்மலர் ஜெயக்குமார் மகாலிங்கம் கையூம் ஆகியோர் இந்தப்பள்ளியில் 12ம்வகுப்பு முடித்து உயர் கல்வி படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிமுறைகள் குறித்தும் மேற்படிப்பின் அவசியம் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கிப்பேசினார்கள். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மேல்படிப்புக்கு விண்ணப்பித்துள்ள படிப்புகள் குறித்து விளக்கினர்.

    ×