என் மலர்
நீங்கள் தேடியது "Cottage fire"
- அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேவந்தனர்.
- வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கீழ் பெருமாள்சேரி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேவந்தனர்.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசைமுழுவதும் பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






