search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corrupation case"

    ஆதரவற்றோர் அறக்கட்டளை முறைகேட்டில் மேல்முறையீடு வழக்கில் கலிதா ஜியாவுக்கு இன்று 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    டாக்கா:

    வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

    இந்த நிலையில் ஆதரவற்றோர் அறக்கட்டளை முறைகேட்டில் மேல்முறையீடு வழக்கில் கலிதா ஜியாவுக்கு இன்று 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    ஆதரவற்றோர் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.6 கோடி முறைகேடாக பெற்றதாக கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரகுமான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிப்ரவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வங்காள தேச ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பளித்தது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கலிதா ஜியா (வயது 73), அவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்தரியின் தனிஉதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    வங்காளதேச ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது. #KhaledaZia #KhaledaZiaGraftCase 
    பனாமா ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ் செரீப் மருமகன் முகமது சப்தாரை பாகிஸ்தான் உச்சநீதிமன்ற அதிகாரிகள் கைது செய்தனர். #MuhammadSafdar #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகளும், அவரது கணவர் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் மேல் முறையீடு செய்ய கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பேரணி ராவல்பிண்டியில் நேற்று நடந்தது. நவாஸ்செரீப் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அவரது மருமகன் முகமது சர்தார் கலந்து கொண்டார்.

    அதை அறிந்த சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகள் அங்கு வந்து அவரை கைது செய்தனர். அவரை கைது செய்ய விடாமல் நவாஸ்செரீப் ஆதரவாளர்கள் 3 ஆயிரம் பேர் வாகனத்தை சுற்றி வளைத்து தடுத்தனர்.

    இருந்தும் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்ற அதிகாரிகள் போலீசிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பாகிஸ்தானில் வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அதில் பாராளுமன்றத்துக்கும், மென்சரா சட்டசபை தொகுதியிலும் சப்தார் போட்டியிடுகிறார். #MuhammadSafdar  #NawazSharif
    ×