search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona decreased to 15"

    • 15 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 5 பேர் பாதிப்பிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ள னர்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 959 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்து ள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 15 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தினசரி பாதிப்பு பதிவாகி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் தற்போது கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வர இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள். எனவே இது போன்ற விசேஷங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியு ள்ளனர்.

    ×