என் மலர்
நீங்கள் தேடியது "Congress leader arrested"
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
- உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நகர்வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
திண்டுக்கல்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைகண்டித்து நாடு முழுவதும் அக்க ட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்ட ங்களில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் ராகுல்காந்தி பிரதமராகும் சமயத்தில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி நாக்கை அறுப்போம் என பேசினார்.
ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜ.க சார்பில் நகர் வடக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இந்த ஆர்ப்பா ட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி யும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து துரை மணிகண்டன் மீது ஒற்றுமை, ஒருமைபாட்டை சீர்குலை க்கும் வகையில் பேசியது, உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நகர்வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் இவரது பேச்சை கண்டித்து காங்கி ரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் நகர்வடக்கு போலீசார் கட்சி அலுவலகத்தில் இருந்த துரைமணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரி டம் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இந்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு போலீசார் வந்து கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் கோஷம் எழுப்பி போரா ட்டம் நடத்தினர். இதனால் பஸ் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.






