search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Condemn fake"

    • போலி பத்திரப்பதிவுகளை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அடுத்த கட்டமாக முதல்வ ரின் வீடு முன்பு போராட்டம் நடத்தப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கீழராஜகுலராமன் சார்பதி வாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் நாராயண சாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்ப ராஜ், மாவட்ட தலைவர்கள் பாஸ்கரன், மதுரை சீனிவாச கன், சமூக ஆர்வலர் சுப்பா ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

    கீழராஜகுலராமன் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திர பதிவுகள் அதிக அளவில் நடப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர். போலி பத்திர பதிவுகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.

    ேபாலி பத்திர பதிவு களால் விவசாய நிலங்க ளுக்கு பாதுகாப்பு இல்லை. இதன் மீது நடவடிக்கை எடுக்கும் முறை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக முதல்வ ரின் வீடு முன்பு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×