search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Concessions"

    தொல். திருமாவளவன் பேச்சானது அம்பேத்கா் இயற்றிய இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது.

    திருப்பூர்:

    மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கிறிஸ்தவா்களாக மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மக்களவையில் பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது பேச்சானது அம்பேத்கா் இயற்றிய இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது.

    இட ஒதுக்கீடு சலுகைகள் என்பது சமூகநீதிக்கானது என்றும், மற்ற மதங்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசியல் சாசன சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே, அவரது கோரிக்கை இந்து சமூகத்தை சீரழிக்கும் என்பதால் மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
    • விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவியர்க–ளுக்காக பள்ளி விடுதிகள் 15, கல்லூரி விடுதிகள் 4 என மொத்தம் 19 விடுதிகள் செயல்படுகின்றன. இந்த 4 கல்லூரி விடுதிகளில் 3 மாணவியர்கள் விடுதி, 1 மாணவர் விடுதி, மேலும் 15 பள்ளி விடுதிகளில் 8 மாணவியர்கள் விடுதி, 7 மாணவர்கள் விடுதி ஆகும்.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவியர்களும். அதற்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிளுக்கு கல்லூரி விடுதிகளில் சேர தகுதியுடைவர்கள் ஆவர். அனைத்து வகுப்பைச்சார்ந்த மாணவ-மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து–க்கொள்ள–ப்படுவார்கள். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ-மாணவி களுக்கும்உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

    10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

    தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்த–ப்பட்ட விடுதிகாப்பாளர்கள், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொ ள்ளலாம்பூர்த்தி செய்ய ப்பட்ட விண்ணப்பங்கள்கல்லூரி மற்றும் பள்ளிவிடுதிகா ப்பாளர், காப்பாளினி களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 15.7.22க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

    தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைக ளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும்வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்க ப்படுகின்றனர். எனவே மாணவ-மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையவாம். இவ்வாறு கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    ×