search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communists"

    • குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
    • இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர், நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

    எம்.ஜி.ஆர். சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆளுகின்ற பா.ஐனதா அரசு, மணிப்பூர் மாநிலத்தை ஆளுகின்ற பா.ஜனதா அரசை கண்டித்தும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்து பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    இதில் நிர்வாகிகள். மணிபாலன், தியாகராஜன், செங்குலத்தான், இன்னரசு ,முருகன் டாடா மேஜிக், மோகன், அருண்குமார், பிரகாஷ்,வேம்பரசி, ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு. சபரிமலை கோவில் வழக்கின் பின்புலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர் என்று பந்தளம் மன்னர் தெரிவித்துள்ளார். #Sabarimala
    செங்கோட்டை:

    சபரிமலை சந்நிதிக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நல்ல தீர்ப்பு வழங்கும் வரை சபரிமலையில் நடக்கும் மகரஜோதி தரிசனத்திற்கான ஆபரண பெட்டியை அனுப்ப முடியாது என்று பந்தளம் மன்னர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் கலந்து கொள்ளும் சரண கோ‌ஷ ஊர்வலம் திருச்செந்தூரில் இன்று (16-ந் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பந்தள மன்னர் மகம் திருநாள் கேரள வர்மராஜா இன்று காலை செங்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு. சபரிமலை கோவில் வழக்கின் பின்புலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர். நாளை பம்பையில் சபரிமலை மேல்சாந்தியை தேர்ந்தெடுக்க உள்ளோம். சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala



    ×