search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college girl kidnap"

    குஜராத் மாநிலத்தில் கற்பழிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பின்னர் பரோலில் வந்த ஆசிரியர் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் உள்ள பாடதாரி நகரைச் சேர்ந்தவர் தாவல் திரிவேதி. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர் மீது 2 மாணவிகள் கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கற்பழிப்பு புகார் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து ராஜ்கோட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அங்கு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தாவல் திரிவேதி, கோர்ட்டில் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு அவருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தாவல் திரிவேதி ராஜ்கோட் ஜெயிலில் இருந்து விடுதலையானார்.

    விடுதலையான சில நாட்களில் சோடிலா என்ற ஊருக்கு சென்றார். அங்கு ஜெய்தீப் தன்தால் என்பவரை சந்தித்தார். ஜெய்தீப் ஒரு கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று ராஜ்கோட் சிறையில் இருந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள்.

    ஜெய்தீப் தனது ஊரில் ஆங்கில டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். அவருடன் தாவல் திரிவேதி தனது பெயரை தர்மேந்திரா என மாற்றிக் கொண்டு டியூசன் சொல்லிக் கொடுத்தார்.

    அப்போது திடீர் என்று ஒரு மாணவியுடன் தாவல் திரிவேதி மாயமாகி விட்டார். இதுபற்றி மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் டியூசன் சென்டர் அருகில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவை போட்டுப் பார்த்தபோது மாணவியுடன் ஆசிரியர் தாவல் திரிவேதி செல்லும் காட்சி பதிவானது. அவர்தான் பெயரை மாற்றிக் கொண்டு டியூசன் சென்டரில் சேர்ந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக ஆசிரியர் தாவல் திரிவேதி மீது போலீசார் கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். ஆசிரியர் பற்றி டியூசன் சென்டரில் விசாரித்த போது அங்கு 9 மாணவிகள் டியூசன் படித்தனர். ஒரு மாணவியை மட்டும் 1 மணி நேரம் முன் கூட்டியே வரச் சொல்வாராம். அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கி இருக்கிறார். பின்னர் கடத்திச் சென்று இருப்பது தெரிய வந்தது.
    ×