search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector provided"

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது .

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது .

    மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் முகாமானது ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இம்முகாமின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், சுய தொழில் தொடங்க கடனுதவி, பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவை குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    இம்முகாமின் மூலம் மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2,02,000 மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளி நலவாரிய திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு இயற்கை மரணம் ஈமச்சடங்கு நிதியுதவி தொகை ரூ.17,000 த்திற்கான காசோலையினையும், கல்வி உதவித்தொகையாக தலா 1 மாணவனுக்கு ரூ.1,000 த்திற்கான காசோலையினையும் ஆக மொத்தம் ரூ.2,20,000/ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையையும் கலெக்டர் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள செவிதிறன் குறைபாடுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் தங்கும் விடுதியில் சுகாதாரமான குடிநீர், உணவின் தரம் ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×