search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector palanisamy"

    பல்லடம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பூர், டிச. 7-

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம், வடுகபாளையம் புதூர், மாணிக்காபுரம் மற்றும் கோடாங்கிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.100.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்லடம் ஊராட்சி ஒன்றியம், வடுக பாளையம் புதூர் ஊராட்சி, வடுகபாளையம் புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.12.83 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிசுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்ததையும், பள்ளி வளாகத்தில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய அங்கன்வாடி மைய கட்டிடனத்தினையும், மாணிக்காபுரம் ஊராட்சி மின்நகர் பகுதியில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையத்தினையும், அதே பகுதியில், ராஜீவ்காந்தி ஊராட்சி கட்டிடங்கள் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஊராட்சி சேவை மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் கோடாங்கிபாளையம் ஊராட்சி சின்ன கோடாங்கி பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் ஓடையில் நடுவே கான்கீரீட் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் அதே பகுதியில், ரூ.2.03 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீரை சேமிக்கும் வகையில் வரத்து வாரியில் குழிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் என பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.100.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பால சுப்பிரமணியன், திட்ட அலுவலர் கிரி, உதவி செயற்பொறியாளர் (சாலைகள்) மீனாகுமாரி, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, வில்சன் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி கூறியதாவது,

    திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும், சங்கிலி பள்ளம் ஓடை, வீரபாண்டி ஓடை, ஜம்மனை ஓடை, சின்னக்கரை ஓடை, நல்லாறு ஓடை மற்றும் பிற நீர்நிலைகளின் கரையோரங்களிலும், சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும், பாய்லர் சாம்பல், சாய கழிவுகள், பின்னலாடை நிறுவன கழிவுகள், பிரிண்டிங் கழிவுகள், பேக்கே ஜிங் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பிற தொழிற்சாலை கழிவுகள், கட்டுமானக்கழிவுகள், வணிக வளாக கழிவுகள் ஆகியவை பகல் மற்றும் இரவு நேரங்களில் கொட்டப்படுவதாலும் நீர் நிலைகள் மாசுபடுகின்றது.

    சில நேரங்களில் இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள் சமூக அக்கறை இல்லாத வி‌ஷமிகளால் தீ வைக்கப்படுகின்றது. இதனால் காற்றும் மாசடைகின்றது.

    இவ்வாறு திடக்கழிவுகளை கொட்டும் தனி நபர்கள், வாகனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் விடுதிகள் மீது நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு சட்டங்களின் மூலமாகவும், உள்ளாட்சி விதிகளின் மூலமாகவும் மோட்டார் வாகன சட்டத்தின் மூலமாகவும், காவல் துறையின் மூலமாகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் திருப்பூர் முதலிபாளையம் பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் சாயக் கழிவுகளை வெளியேற்றிய வாகனங்களும் மற்றும் திருப்பூர் தெற்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் காங்கயம் குட்டப்பாளையம் நொய்யல் ஆற்றின் அருகில் சாயக் கழிவுகளை வெளியேற்றிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் உருவாகின்ற அனைத்து திடக்கழிவுகளையும், செப்டிக் டேங்க் கழிவுகளையும் நகராட்சி நிர்வாகம் மூலமாகவும், மறு சுழற்சி முறையிலும் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×