search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coalition regime"

    கூட்டணி ஆட்சியில் எந்த குழப்பத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
    பெங்களூரு:

    பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இந்த கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். அதேபோல் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். இடங்கள் பங்கீடு குறித்து அடுத்து வரும் நாட்களில் நாங்கள் ஆலோசித்து முடிவு எடுப்போம்.

    கூட்டணி ஆட்சியில் நாங்கள் எந்த குழப்பத்திற்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டோம். கூட்டணி அரசில், விட்டுக்கொடுத்து போகும் போக்கை இரு கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். எங்கள் கட்சிக்கு 22 மந்திரி பதவி கிடைத்துள்ளது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து மந்திரி பதவிகளையும் நிரப்பாமல், சில இடங்களை காலியாக வைப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

    முதல்-மந்திரி நடத்தும் ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சரியான முடிவு தான். இதனால் கூட்டங்களில் தேவை இல்லாத தொல்லைகள் நீங்கும். அதிகாரிகள் கவனம் சிதறாமல் செயல்படும் நிலை ஏற்படும். தகுதியான ஒருவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும்.

    எங்கள் கட்சியில் மந்திரி பதவிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள். அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை விரைவில் நிறைவடையும். மத்திய அரசு, சி.பி.ஐ. விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்துகிறது.

    எங்கள் கட்சியை சேர்ந்த டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த அதிகாரிகள், டி.கே.சுரேஷ் எம்.பி.யின் பெயரை குறிப்பிடுமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சரியல்ல.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
    ×