search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cholavandan"

    • சோழவந்தான் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • உடற்கல்வி துறை ஆசிரியர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    சோழவந்தான்

    தென்மாநில சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேக் வாண்டோ போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அந்தமான் நிக்கோபார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பங்கு பெற்றன.

    3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மதுரை கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்று தமிழகத்தில் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அர்ஜுன், மிதுழ்செல்வன் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தேக் வாண்டோ பயிற்சியாளர் தேவா, உடற்கல்வி துறை ஆசிரியர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    ×