search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitragupta Temple"

    • சித்ரா பெளர்ணமி பூஜை மற்றும் பொங்கல் விழா இன்று நடைபெற்றது
    • சித்ரகுப்தர் திருவீதி உலா ஊஞ்சல் ராகத்துடன் திருக்கோவில் வந்தடைந்தது

     திருப்பூர் : 

    திருப்பூர் சின்னாண்டிபாளையம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் 94ம் ஆண்டு சித்ரா பெளர்ணமி பூஜை மற்றும் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. நேற்று விநாயகர் பூஜையுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியானது சித்ரகுப்தர் திருவீதி உலா ஊஞ்சல் ராகத்துடன் திருக்கோவில் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு யாகம் துவங்கப்பட்டு பூர்ணாஹூதி செய்யப்பட்டு சித்ர குப்தருக்கு தேன்,நெய்,பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் கலசாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சித்ரகுப்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னம் படைத்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைக்கும் வழிபாடு செய்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சித்ரகுப்தரை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சித்திரகுப்தர் கோவிலில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • மதுக்கடையை அகற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவில் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அதனை அகற்றக்கோரி ஏற்கனவே அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சித்திரகுப்தர் கோவில் அருகே உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சிவானந்தம் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் மனு அளித்தனர்.

    ×