search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China rain"

    • ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து பலர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.
    • மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து பலர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பலர் இடிபாடுகளுக்குள் மாட்டி இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மோப்பநாய் உதவியுடன் மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

    சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    ஷாங்காய்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 24 மாகாணங்களில் உள்ள 241 ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏராளமான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிச்சுவான் மாகாணத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

    சிச்சுவானின் மின் நதியில் கட்டப்பட்டிருந்த பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலங்கள் உடைந்துள்ளன. ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.


    மழை பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மழை தொடர்பான விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக 387 கோடி டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


    இதற்கிடையே, இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு அதிகமாகி, நிலச்சரிவும் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. #ChinaRain
    ×