என் மலர்
நீங்கள் தேடியது "Children Rescue"
- உக்ரைன் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்றும் அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ரஷியா தெரிவித்தது.
- குழந்தைகள் மீட்பு பணியை சேவ் உக்ரைன் மனிதாபிமான அமைப்பு செய்து வருகிறது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.
போரின் போது ரஷிய படைகள் பிடித்த பகுதிகளில் இருந்த மக்கள் ரஷியா மற்றும் கிரிமியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஏராளமான குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டனர்.
சுமார் 19,500 குழந்தைகள் ரஷியா அல்லது ரஷியா ஆக்கிரமிப்பு கிரிமியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்றும் அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ரஷியா தெரிவித்தது.
ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட உக்ரைனின் சிறுவர்-சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உக்ரைனை சேர்ந்த 31 சிறுவர்-சிறுமிகள் மீண்டும் பெற்றோருடன் இணைந்தனர்.
இவர்கள் கார்கில் மற்றும் கெர்சன் பகுதிகளில் இருந்து ரஷியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு இருந்தனர். 31 பேரும், உக்ரைன்-பெலாரஸ் எல்லை வழியாக சொந்த நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது தங்கள் பெற்றோரை கட்டியணைத்து அழுதனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் கூறும்போது, நாங்கள் தத்தெடுக்கப்படுவோம். எங்களுக்கு பாதுகாவலர்கள் கிடைப்பார்கள் என்று ரஷிய அதிகாரிகள் கூறினார்கள். இங்கு நீண்ட காலம் இருப்போம் என்று அவர்கள் சொன்ன போது அழ ஆரம்பித்தோம்.
நாங்கள் தங்க வைக்கப்பட்ட முகாம்களில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தன. அவைகளுடன்தான் நாங்கள் இருந்தோம் என்றனர். குழந்தைகள் மீட்பு பணியை சேவ் உக்ரைன் மனிதாபிமான அமைப்பு செய்து வருகிறது.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் ஆய்வு செய்தனர்.
- குழந்தைகளின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தருமபுரி:
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 2 குழந்தைகள் யாருடைய அரவணைப்பின்றி சுற்றித் திரிந்தனர்.
நீண்ட நேரமாக 2 குழந்தைகளும் சுற்றி வந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் 2 குழந்தைகளை அழைத்து விசாரணை செய்ததில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு-நந்தினி தம்பதியினரின் குழந்தைகளான ராகவஸ்ரீ(5), முகேஸ்(3) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குழந்தைகளை மருத்துவமனையில் விட்டுச் சென்றவர் யார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் ஆய்வு செய்தனர்.
இதில் குழந்தைகளின் தாயார் நந்தினியே மருத்துவமனையில் குழந்தைகளை விட்டுச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இந்த குழந்தைகளின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நந்தினியின் அண்ணன் பாலாஜியிடம் 2 குழந்தைகளையும் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் சேட்டுக்கும், நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதும், இதனால் தாயார் நந்தினி தனது 2 குழந்தைகளை மருத்துவமனையில் விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






