search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Protection Unit"

    • விண்ணப்பங்களை புகைப்படத்துடன் வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
    • விண்ணப்பங்களை www.tirupur.nic.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் நிறுவனம் சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், நிறுவனம் சாராத குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர் (பெண்கள் மட்டும்), ஆற்றுப்படுத்துனர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதை அடிப்படையாக கொண்டு அரசு பணி கோர முடியாது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பங்களை புகைப்படத்துடன் வருகிற 20-ந் தேதி மாலை 5.45 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.633, 6-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971198 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை www.tirupur.nic.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×