search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief engineer"

    • மக்கள் தடுப்புகளின் மீது வாகனங்களை தவறுதலாக ஏறி நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
    • சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட்டு சாலையை அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்தியால்பேட்டை காந்திவீதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை மேற்கொண்டபோது சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை அகற்றாமல் சாலையை அமைத்துள்ளனர். இதனால் சுமார் ஒரு அடிக்கும் குறைவான தடுப்புகள் இருப்பதே தெரியாத நிலை உள்ளது.

    இந்த சாலையில் பயணிக்கும் மக்கள் தடுப்புகளின் மீது வாகனங்களை தவறுதலாக ஏறி நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    இதுபோன்ற விபத்து சம்பவங்களை தடுக்க சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட்டு சாலையை அமைக்க வேண்டும். இல்லவிட்டால் தடுப்புளை சரியான உயரத்தில் அமைத்து, அதன்மேல் இரும்பு கிரில் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் மனுவில் கூறியுள்ளார்.

    கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்க லஞ்சம் வாங்கியதாக ராணுவ பொறியியல் துறை தலைமை பொறியாளர் உள்பட 6 பேரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.
    புதுடெல்லி:

    கொச்சி கடற்படை தளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்க ஒப்பந்த பணிகளுக்கான மதிப்பீட்டில் ஒரு சதவீதம் தொகையை கமிஷனை வாங்கியதாக கொச்சி ராணுவ பொறியியல் துறை தலைமை பொறியாளர் ராகேஷ் குமார் கார்க் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைதொடர்ந்து, டெல்லி, கொச்சி, அஜ்மீர், கொல்கத்தா உள்பட 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ராகேஷ் குமார் கார்க் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது அவர் பெற்றிருந்த லஞ்சப் பணம் 1.21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதர சோதனைகளின்போது 3.97 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆறு கிலோ தங்கம் பிடிபட்டது.

    இந்நிலையில், தலைமை பொறியாளர் ராகேஷ் குமார் கார்க் உள்பட ஆறுபேரை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
    ×