search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chhattisgarh Encounter"

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கரில் மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறார்கள்.

    இதையும் மீறி அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நக்சல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் தாக்கினார்கள். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த என்கவுண்டர் சம்பவத்தில் 2 போலீசாரும் பலியானார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    சத்திஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் இன்று சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter
    ராய்ப்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்திஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக இந்தோ-திபெத்திய எல்லைப்படை மற்றும்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்திஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 14 நக்சலைட்டுகளை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #ChhattisgarhEncounter
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளின் ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    அவ்வகையில், தண்டேவாடா-பிஜப்பூர் எல்லையில் உள்ள டைம்னார் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை மற்றும் அதிரடிப் படை வீரர்கள் இன்று காலை ரோந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பிற்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் சில மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



    அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #ChhattisgarhEncounter #NaxalsKilled
    ×