என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் துப்பாக்கி சண்டை- 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்26 Nov 2018 8:26 AM GMT (Updated: 26 Nov 2018 8:26 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கரில் மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறார்கள்.
இதையும் மீறி அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நக்சல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் தாக்கினார்கள். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுண்டர் சம்பவத்தில் 2 போலீசாரும் பலியானார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கரில் மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறார்கள்.
இதையும் மீறி அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நக்சல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் தாக்கினார்கள். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. போலீசாரின் தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுண்டர் சம்பவத்தில் 2 போலீசாரும் பலியானார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #ChhattisgarhEncounter #NaxalsKilled
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X