search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Airport gold smuggling"

    சென்னை வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் மறைத்து ரூ.7½ லட்சம் தங்க நகைகள் கடத்தி வந்த இலங்கை பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்தவர்களிடம் சுங்க இலாகா துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது இலங்கையை சேர்ந்த பெண்ணின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. எனவே அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    எனவே அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் உள்ளாடைகளில் மறைத்து 1 தங்க செயின், 4 வளையல்கள், ஒரு மோதிரம், கடத்திவந்தது தெரிய வந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டது.250 கிராம் எடையுள்ளஅந்த நகைகளின் மதிப்பு ரூ.7.50 லட்சம் ஆகும்.

    தங்க நகைகள் கடத்தி வந்த இலங்கை பெண் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

    ×