என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chair breakage"
- பண்ருட்டியில் அரசு பள்ளியில் ரகளை செய்த மாணவர்களால் பரபரப்பு நிலவியது.
- மாணவர்கள் முன்பக்க வாசல் வழியாக வெளியே சென்று அங்கிருந்த வீடுகளில் புகுந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி காந்தி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கே 500-க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு நேற்று மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எவ்வாறு உடை உடுத்த வேண்டும். எவ்வாறு முடிதிருத்தம் செய்து வர வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர் பூவராக மூர்த்தி அறிவுரை கூறிமாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார்.
தலைமையாசிரியரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாண வர்கள் வகுப்பறையில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். அருகில் இருந்த கழிவறை கதவு களை உடைத்தனர் . ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் முன்பக்க வாசல் வழியாக வெளியே சென்று அங்கிருந்த வீடுகளில் புகுந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டனர்.
வீட்டுஉரிமையாளர்கள் கழி எடுத்து கொண்டு மாணவர்களை துரத்தினர் தப்பி ஓடியமாணவர்கள் பள்ளிக்குள் புகுந்தனர். வீட்டு உரிமையாளர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். தலைமை ஆசிரியர் இது சம்பந்தமாக பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றினர். மாணவர்களின் பெற்றோ ருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர் . இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்