search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central police secuirty force"

    தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மத்திய போலீஸ் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். #ChennaiCentral
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம் ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    ஒவ்வொரு நடைமேடையிலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதால் இதை பயன்படுத்தி திருடர்களும் உள்ளே புகுந்து கைவரிசை காட்டத் தொடங்கி விட்டனர்.

    இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ரெயில் நிலையங்களுக்கு வரும் மக்கள் தொகையை கணக்கெடுக்கையில் அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே போலீசாருடன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய போலீஸ் படையினரும் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ரெயில் நிலையங்களின் நுழைவாயில், பிளாட்பாரங்கள் ஆகிய இடங்களில் இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை கூட்டம் இருக்கும்வரை மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ChennaiCentral
    ×