search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Jail Coimbatore"

    கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவி(வயது 56). திருப்பூர் ரூரல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    இதையடுத்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ரவி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை சிறையில் இருந்த ரவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சிறை ஊழியர்கள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். 

    இது குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×