search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell Phone Service Vulnerability"

    • பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று திடீரென்று தடைபட்டது.
    • அடுத்த மாதம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும்.

    சென்னை:

    பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று திடீரென்று தடைபட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

    தனியார் செல்போன் நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. 4ஜி சேவையையே வழங்கி நீண்ட நாள் ஆகி விட்டது.

    நிதிப்பற்றாக்குறை, ஆள்பற்றாகுறை உள்பட பல்வேறு காரணங்களால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழகத்தில் தரம் உயர்த்து வதை தாமதப்படுத்தியதாக வும் தற்போது 4ஜி அலை வரிசையை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாகவும் அடுத்த மாதம் (ஜூன்) சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் என்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.

    மின்வெட்டு காரணமாக தடை ஏற்பட்டதாகவும் நெட்வொர்க்கை சீரமைக்க கணினியை மறுதொடக்கம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று பிற்பகலுக்குள் நிலைமை சீரடையும் என் றும் தெரிவித்தனர்.

    ×