search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauvery delta villages"

    கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டெல்டா கிராமங்களில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
    கடலூர்:

    கொள்ளிடம் வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் வள்ளம் படுகை, பழநெல்லூர், வெங்காயமேடு, அகரநல்லூர், நடுத்திட்டு, பைபூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் இது குறித்து அறிந்து டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்களை வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    மக்கள் தங்குவதற்கான முகாம்கள் அமைத்தல், உணவுப்பொருட்கள், போர்வை முதலிய அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. அணைக்கரை பகுதியில் கொள்ளிடக்கரை ஓரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கரையோரப்பகுதி மக்கள் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள் அவர்களுக்கு உணவு, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

    ×