search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "causing panic"

    • அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி ரோட்டில் லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டி கொண்டே சென்றது.
    • ஆயில் கசிந்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாற்றம் அடைந்து ஆயிலின் பசை தன்மையால் சாலையில் விழுந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி ரோட்டில் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டி கொண்டே சென்றது.

    அப்போது அந்த வழியாக கார், இரு சக்கர வாகனங்கள் வந்தது. ஆயில் கசிந்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாற்றம் அடைந்து ஆயிலின் பசை தன்மையால் சாலையில் விழுந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறை க்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் ஆயில் கசிந்த பகுதிகளில் டயர்களை போட்டு அந்த பகுதியில் வாகனங்கள் வராமல் தடுக்கப்பட்டு மணல் போட்டு சரி செய்தனர்.

    இதனால் வாகனங்களில் வந்தவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்த னர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பும் பர பரப்பும் அந்தப் பகுதியில் நிலவியது.

    ×