search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cattle sale for"

    • நாட்டுமாடுகள் 45 ஆயிரம், வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது.
    • மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை, நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுசந்தையில் ஜெர்சி 41 ஆயிரம், சிந்து 46 ஆயிரம், எருமை மாடுகள் 15 முதல் 33 ஆயிரம் வரை விற்றது.

    நாட்டுமாடுகள் 45 ஆயிரம், வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு 7 ஆயிரம், செம்மறியாடு 6 ஆயிரம் வரை விற்றது.

    இதில் மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×