search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registered against 24 people"

    • விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
    • ஆட்களை ஏற்றி வந்த 9 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் உத்தரவின் பேரிலும், துணை போக்குவரத்து ஆணையர் வழிகாட்டுதலின் பேரில் சரக்கு வாகனங்களில் ஆட்க ளை ஏற்றி செல்வதை தடுக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கட் ரமணி (ஈரோடு கிழக்கு), பதிவைநாதன் (ஈரோடு மேற்கு), சக்திவேல் (பெரு ந்துறை) ஆகியோர் தலைமை யில் அதிகாரிகள் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

    அதிக பாரம் ஏற்றி வந்ததாக 9 வாகனங்கள், வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததாக 7 வாகனங்கள், தகுதி சான்று புதுப்பிக்காத 7 வாகனங்கள், காப்பு சான்று இல்லாத 15 வாகனங்கள் உட்பட போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 99 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 3 ஆயிரத்து 150 அப ராதமாக விதிக்கப்பட்டது.

    மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆட்களை ஏற்றி வந்த 9 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இதுபோன்று சோதனைகள் நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×