என் மலர்
நீங்கள் தேடியது "case against 20 people"
- இதனை அகற்றவேண்டும் என்று ஆதீனம் மடம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
- இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பொம்பூர் ஆதீனமடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமான நிலம் வானூர் அருகே குயிலாபாளையத்தில் உள்ளது. இந்த இடத்தை பலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனை அகற்றவேண்டும் என்று ஆதீனம் மடம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றினர். அதன் பின்பு ஆதீனம் மடத்தை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்ட நிலத்தில் வேலி அமைத்து பாதுகாத்தனர்.
இதற்கிடையில் இந்த இடத்தில் அமைக்க ப்பட்டிருந்த வேலிகள் அகற்றப்பட்டது. இதணை அறிந்த ஆதீனமடம் நிர்வாகிகள் ஆரோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு குயிலாபாளையம் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகி சுந்தர், பற்குணம், அர்ஜிணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 20 பேர் சேர்ந்து வேலியை அகற்றியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது.
- இவர்கள் குடிபோதையில் சத்த ம்போட்டு க்கொண்டுஇருசக்கர வாகனத்தில் எஸ்.கே.பாளையம் தோப்பு வழியே சென்றனர்.
- 10 பேர் மாளிகைமேடு காலனியை சார்ந்த இருவரையும் பார்த்து அசிங்கமாக திட்டியதால் , இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,
கடலூர்:
பண்ருட்டி அருகே மாளிகை மேடு காலனியை சேர்ந்த மோகன் மகன் தனுஷ், பிரகாஷ் மகன் பிரதீப். இவர்கள் காணும்பொங்கல்தினமான நேற்று குடிபோதையில் சத்த ம்போட்டு க்கொண்டுஇருசக்கர வாகனத்தில் எஸ்.கே.பாளையம் தோப்பு வழியே சென்றனர் அப்போது தோப்பில் மதுகுடித்து கொண்டிருந்தஎஸ்.கே. பாளையம்கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், செந்தில் உள்ளிட்ட10 பேர் மாளிகைமேடு காலனியை சார்ந்த இருவரையும் பார்த்து அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இரு தரப்பினரும் தங்கள் ஊர் மற்றும் காலனி தரப்பினரை வரச்செய்து ஒருவரை ஒருவர் கல், தடியால் தாக்கி கொண்டனர். இ ந்த மோதலில் மாளிகை மேடு காலனியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (50)பிரபு (40), வசந்தா (38) நாவத்தாள் (50)வசந்த் ஆகியோர் காயமடைந்தனர் இவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.எஸ் கே பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று இது குறித்து சசி, செந்தில், அருண், கவுதம்,பூவரசன் ,சுந்தரம் ,செங்குட்டுவன்,சிவகுமார்,பிரபாகரன்,ரமேஷ்,கிருஷ்ணமூர்த்தி,விஜயகுமார்,குமார் மதன் காந்தி உள்ளிட்ட20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இங்கு பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்






