search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case adjourned"

    தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #DSP #Vishnupriya #SuicideCase
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ல் முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில், குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ கடந்த ஏப்ரல் 16 அறிக்கை தாக்கல் செய்தது.

    டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தந்தை ரவி தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்ய ஒரு மாதம் கால அவகாசம் கேட்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் ஜூலை (19-ந் தேதிக்கு) ஒத்தி வைத்தார். பின்னர் டி.எஸ்.பி.விஷ்னுபிரியா தந்தை ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

    பிரேத பரிசோதனை, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், தற்கொலை கடிதம், செல்போன் குறுஞ்செய்தி , சிபிஐ அறிக்கையின் முழு அம்சம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆர்.டி.ஐ.யில் கேட்கப்பட்டுள்ளது. தகவல் பெறப்பட்டவுடன் பதில் மனு செய்யப்படும். நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.#DSP #Vishnupriya #SuicideCase
    டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 10 மீதான வழக்கின் விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். #AnbumaniRamadoss
    புதுடெல்லி:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார். அவருடைய பதவி காலத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய இடங்களில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் ஜெயின் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அன்புமணி ராமதாஸ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வருகிற 25-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 10 மீதான வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அன்புமணி ராமதாஸ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்டு உள்ள வழக்கு 25-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே இங்கு நடைபெறும் வழக்கின் விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என நீதிபதிகள் அறிவித்தனர்.

    ×