search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carrying mud to"

    • சென்னிமலை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    கொடுமுடி:

    மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார்.

    வைகை நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர். அப்போது அரசன் உடனடி யாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டான்.

    வந்தி மூதாட்டி தன்னு டைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியா மல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை. பிறகு தான் எந்நேரமும் போற்றும் சிவபெருமானை வணங்கி கொண்டருந்தார்.

    அப்போது சுந்தரேச பெரு மான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்று, தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வ தாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார். இறுதி யில் வந்தி மூதாட்டிக்கும் பாண்டிய மன்ன னுக்கும் சிவபெருமான் தரி னசமாக காட்சியளித்தார்.

    அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இவ்விழா கடந்த 43 வருடங்க ளாக நடைபெற்று வருகிறது.

    இந்த வருட விழா நேற்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்ப ட்டிரு ந்தது.

    மாலை 5.20 மணிக்கு வைகை கரைக்கு கைலா சநாதர், சிவகாசி அம்மாள், மற்றும் வள்ளி தெய்வா னை யுடன் சுப்பிரமணிய சுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.

    சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சா ரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டு திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார்.

    இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இறைவன் பிட்டுக்கு மண்சு மந்த நிகழ்வு கோவில் அர்ச்ச கர்களால் நடத்தி காட்டப்ப ட்டது.

    நிகழ்வின் தொடக்க மாக மகுடேஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்த ப்பட்டு அலங்காரங்கள் முடி ந்த பின்னர் உற்சவர் திருவீதி உலா நடந்தது.

    இதனையடுத்து கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது.
    • கைலாசநாதர், சிவகாசி அம்மாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.

    சென்னிமலை:

    மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார்.

    வைகை நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர். அப்போது அரசன் உடனடி–யாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டான்.

    வந்தி மூதாட்டி தன்னுடைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை. பிறகு தான் எந்நேரமும் போற்றும் சிவபெருமானை வணங்கி கொண்டிருந்தார்.

    அப்போது சுந்தரேச பெருமான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்று, தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வதாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார். இறுதியில் வந்தி மூதாட்டி க்கும் பாண்டிய மன்னனுக்கும் சிவபெருமான் தரினசமாக காட்சியளித்தார்.

    அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இவ்விழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வருட விழா நேற்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.20 மணிக்கு வைகை கரைக்கு கைலாசநாதர், சிவகாசி அம்மாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.

    சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் மற்றும் மதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×