search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "canal sadaiyaneri"

    சடையனேரி கால்வாய்க்கு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை திருப்பி விட கோரி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    சாத்தான்குளம்:

    தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு சமூக ஆர்வலரும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவருமான தேவதிரவியம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாத்தான்குளம் தாலுகா கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் இப்பகுதியில் உள்ள அனைத்துக்குளங்களும் வறண்டு போய்விட்டன. தாலுகா முழுவதும் அனைத்து கிணறுகளும், போர்களும் தண்ணீர் இல்லாமல் வாழை பயிர்களும், தென்னை மரங்களும் பட்டுப் போய் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படும் நிலை உள்ளது.

    தற்போது பாபநாசம் அணை நிரம்பி பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. எனவே அரசும், அதிகாரிகளும் உடனடியாக சடையனேரி கால்வாய்க்கு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை திருப்பி விட வேண்டும். இதன்மூலம் இப்பகுதியில் புத்தன்தருவை, வைரவன் தருவை குளங்கள் நிரம்பி விவசாயத்திற்கும், குடி தண் ணீருக்கும் ஏதுவாக அமையும். எனவே விவசாய குடும்பங்களை காப்பாற்றிடவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×