search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Butcher shops"

    • தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.
    • ஆக்கிரமிப்பில் இயங்கிய ஆட்டு இறைச்சி கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.

    ஆட்டு இறைச்சி விற்பதற்கும் கடை நடத்துவதற்கும் உரிய நகராட்சி அனுமதி இல்லாமல் நடப்பதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஆட்டு இறைச்சி தரம் உள்ளது என்றும், புதிதாக வெட்டப்பட்டது என்பதற்கும் நகராட்சி மூலம் ஒப்புதல் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும் என்பது நடைமுறை.

    ஆனால் போடியில் தற்போது புற்றீசல் போல பெருகிவரும் ஆட்டிறைச்சி கடைகள் உரிய அனுமதி இன்றியும் நகராட்சி அனுமதி பெறாமல் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்தன.

    மேலும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று கடைகள் நடத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனையடுத்து ஆக்கிரமிப்பில் இயங்கிய ஆட்டு இறைச்சி கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • இந்த சோதனையின்போது 35 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் துறை ஆணையர், அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 15 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறு முத்திரையிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 17 வியாபாரிகள் மீதும், தராசின் எடையினை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக் கற்கள் வைத்திருக்காத 3 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 25-ந் தேதி நடைபெறும். எனவே இறைச்சி மற்றும் மீன்கடை வியாபாரிகள் தங்களது எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திைர ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.இந்த சிறப்பாய்வில் சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் முத்து மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேசுவரன், செல்வராஜ். திருமதி.அ.பாத்திமா, துர்கா, முருகன், முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    ×