search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Businessmen"

    • சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்றது.
    • புதிய ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும்.

    திருப்பூர் :

    நாளை முதல் சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வரப் போகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் சேவை நாட்டிலேயே அதிவேகமாக செல்லக் கூடியது, உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட ெரயில் பெட்டிகள், சென்னை ஐசிஎப் தொழிற்சா லையில் தயாரிப்பு பணிகள் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் பயணிகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

    கிட்டதட்ட விமான சேவையை போன்றது எனச் சொல்லலாம். முதலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் முழுவதுமாக குளிர்சாதன வசதி கொண்டது. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க லாம். கட்டணம் சற்று அதிகம் தான். இந்த ெரயிலில் தானியங்கி கதவுகள் இடம்பெற்றுள்ள ன. மேலும் வைபை வசதி இருக்கிறது. ஜிபிஎஸ் சேவையும் உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டுள்ளது.

    பயோ கழிவறைகள் காணப்படுகின்றன. சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று ஆச்சரியப்படுத்தியது. இவ்வளவு வேகத்தில் ரெயிலின் உட்புறத்தில் பெரிய அளவில் அதிர்வுகளோ அல்லது குலுங்கவோ இல்லை. அதிகபட்சமாக 1,128 பயணிகள் வரை செல்ல முடியும். இதுவரை 11 வந்தே பாரத் ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    12வது ெரயில் சேவையாக சென்னை- கோவை வழித்தடம் அமையவுள்ளது. மற்ற வந்தே பாரத் ெரயில்களில் 12 பெட்டிகள் இருக்கும் நிலையில், இந்த புதிய ெரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயிலின் நேர அட்டவணை வெளியாகி பயணிகள் மத்தியில் எதி ர்பார்ப்பை கூட்டியுள்ளது.

    முதலில் கோவையில் காலை 6 மணிக்கு புறப்படும். நண்பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தை வந்தடையும். இடையில் திருப்பூர் (6.30), ஈரோடு (7.17), சேலம் (8.08) என 3 ெரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 2.20 மணிக்கு ெரயில் புறப்படுகிறது. கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.

    இடையில் சேலம் (6.03), ஈரோடு (7.02), திருப்பூர் (7.43) ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இடைப்பட்ட ெரயில் நிலையங்களில் 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை மற்றும் கோவைக்கு இடையிலான 495.28 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் கடந்து விடும். வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் ரெயில் இயங்காது. மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தொழில் விஷயமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கோவை சென்று விமானத்திலும், சிலர் கார்களிலும், ரெயில்களிலும் பயணிப்பா ர்கள். ரெயில்களை பொருத்தவரை டிக்கெட் கிடைக்காதது ஒருபுறமிருக்க தொழிலதிபர்கள் பலர் நவீன வசதிகளை எதிர்பார்ப்பார்கள். அந்த வசதிகள் வந்தே பாரத் ரெயிலில் இருப்பதால் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×