search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus passenger"

    கொரடாச்சேரியில் பஸ் சீட்டில் உட்கார சென்ற பயணியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவாரூர்:

    நாகை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 33). இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இருந்து நாகை செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார்.

    பஸ்சின் கடைசி சீட்டில் உட்கார சென்ற அவரை அதில் அமர்ந்திருந்த பெங்களூரைச் சேர்ந்த சதீஸ் அரவிந்த்பால், சீனு, பிரதாபன், சதீஸ்குமார் ஆகிய 4 பேரும் அமர விடாமல் தகராறு செய்து அடித்துள்ளனர். 

    இதுபற்றி சுரேந்தர் கொரடாச்சேர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து சுரேந்தரை தாக்கிய 4 பேரையும் கைது செய்தார்.

    ×