search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus conductor suicide"

    குத்தாலம் அருகே உறவினர்கள் தரக்குறைவாக பேசியதால் அரசு பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் மேல தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. சீர்காழி அரசு போக்குவரத்து பணி மனையில் தற்காலிக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவரது தங்கைக்கு திருமணம் நடந்தது. அப்போது அவரது உறவினர் , மணிகண்டனை குறித்து தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று திரு குளம்பியம் என்ற இடத்துக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×