search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building contractor suicide"

    • கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ராகேஷ் என்பவர் தொழில் போட்டி காரணமாக சிவக்குமார் மகனை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
    • ராகேசை பிடிக்க திருப்பூர் போலீசார் கேரளா விரைந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள வேலம்பாளையம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் சிவக்குமார் என்பவரின் மகன் சஞ்சய் பிரணவ் ரூ.6 கோடி கேட்டு மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ராகேஷ் என்பவர் தொழில் போட்டி காரணமாக சிவக்குமார் மகனை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராகேசை பிடிக்க திருப்பூர் போலீசார் கேரளா விரைந்தனர்.

    இந்தநிலையில் போலீசார் விசாரணைக்கு பயந்து ராகேஷ் கொல்லத்தில் உள்ள தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மாணவனை மீட்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    நெட்டப்பாக்கம் அருகே மனைவி இறந்த வேதனையில் கட்டிட காண்டிராக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் தண்ணீர்தொட்டி வீதியை சேர்ந்தவர் பார்த்திபராஜ் (வயது62) கட்டிட காண்டிராக்டர். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தெய்வாணை என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெய்வாணை திடீரென இறந்து போனார். இதற்கிடையே பார்த்திபராஜ் மனவேதனைக்குள்ளானார். இதனை மறக்க பார்த்திபராஜ் குடிபழக்கத்துக்கு ஆளானார். ஆனாலும் மனைவி இறந்த வேதனையில் சோகத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுகுடித்துவிட்டு வீடு திரும்பிய பார்த்திபராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டு வாரண்டாவில் ஊஞ்சல் கட்டும் கொக்கியில் மின்வயரால் தூக்குபோட்டு தொங்கினார்.

    இன்று காலையில் பார்த்திபராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவரது மகன் பலராமன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மடுகரை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×