search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budar Mandi near Kuniyamuthur"

    • நொய்யலாறு கிட்டத்தட்ட 7ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது.
    • நொய்யல் ஆற்றின் ஒரு பகுதி நீர் நிரம்பி வரும் தருவாயில் வெள்ளலூர் குளத்தில் கலக்கிறது.

    குனியமுத்தூர்

    குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நொய்யலாறு கிட்டத்தட்ட 7ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது. நொய்யல் ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்த நிலையில் உள்ளது.

    மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிளம்பும் இந்த நொய்யல் ஆறு ஏராளமான தோப்புகள், தோட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் உள்ள கிணறுகளுக்கு நீரூற்று அதிகம் ஏற்படும் நிலை உள்ளது.

    இந்நிலையில் புதர் மண்டி கிடக்கும் காரணத்தால் நீர் போக்குவரத்து தடைபடுகிறது. நொய்யல் ஆற்றின் ஒரு பகுதி நீர் நிரம்பி வரும் தருவாயில் வெள்ளலூர் குளத்தில் கலக்கிறது. மறுபகுதி காவேரி சென்றடைகிறது. ஆகாய த்தாமரைகளையும், முட்புதர்க ளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று குளம் சீரமைப்பு குழுவினரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

    ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு குளங்களை சீர் அமைப்போம் என்னும் பணியில் ,ஏராளமான குளங்களுக்கு பராமரிப்பு பணி செய்தனர். ஆனால் நொய்யல் ஆற்றை அப்படியே விட்டு விட்டனர். எனவே இதனை தூர்வாரி ஆகாயத்தாமரை களையும், புதர்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ×