search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bsnl employee house"

    கடையநல்லூர் அருகே பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது58). இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது மாமியார் இறந்து விட்டதால் துஷ்டிக்காக வெள்ளத்துரை குடும்பத்துடன் அருகில் உள்ள மாமியார் வீட்டிற்கு  சென்று விட்டார். 

    இரவில் வீடு திரும்பிய போது வீட்டு கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.16 ஆயிரம் மற்றும் பல ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.  

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து வெள்ளத்துரை கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×