என் மலர்
நீங்கள் தேடியது "Breastfeeding awareness programme"
- தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.
- இந்த விழிப்புணர்வு வார விழா இன்று முதல் வரும் 7-ந் தேதி வரை நடக்கிறது.
ஈரோடு:
சிசு மரணங்களை குறைக்க, ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த குழந்தைகள் உருவாக, மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதை தடுக்க தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் தாய்ப்பால் புகட்டுவதால் ஏற்படும் நன்மை, வழங்காத தால் ஏற்படும் குறைபாடு குறித்து சமுதாய கூடங்கள், தாய்ப்பால் புகட்டும் பெ ண்கள், பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செவிலியர், மாணவர் வாயிலாக விழிப்புணர்வு வழங்கப்படும்.
இந்த விழிப்புணர்வு வார விழா இன்று முதல் வரும் 7-ந் தேதி வரை நடக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தாய் சேய் நல விடுதிகள், சத்துணவு மையங்களில் பாலூட்டும் தாய்மார் களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.
தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு ஊட்ட ச்சத்தும், புத்தி கூர்மையும் கிடைக்கும். தாய்- சேய்க்குள் ஆரோக்கி யமான உறவு வளரும். தாய்ப்பால் புகட்டாத குழந்தைகள் நோய் வாய்ப்பட்டு இற ப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.






