search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahma Kamalam Flower"

    • கோடைசீசன் காலங்களில் பூக்கும் பிரம்மகமலம் நாற்று பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டது.
    • பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள இந்த பிரம்ம கமலபூவை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் உயர்ந்து காணப்படும் மரங்களும், கண்ணுக்கு விருந்த தாக காட்சியளிக்கும் மலைமுகடுகளும் தலை தட்டும் மேககூட்டங்களும் இதமான தட்பவெப்ப நிலையும் சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    தேர்வுகள் முடிந்து தொடர் விடுமுறை காரணமாக கொடை க்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து ள்ளனர். கோடைகாலம் என்பதால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் கொடைக்கானலுக்கு வந்து இயற்கை கொஞ்சும் எழிலை அனுபவித்து செல்கின்றனர்.

    இவர்களை கவரும் வகையில் கோடைசீசன் காலங்களில் பூக்கும் பிரம்மகமலம் நாற்று பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த பூ பூக்கும். பிரம்மகமலபூ பகல் நேரங்களில் மொட்டாகவும், இரவில் மட்டுமே பூக்கும் தன்மையும் கொண்டது.

    பூக்கும் நாட்களில் இருந்து 2 வாரங்களுக்கு பிரம்மக மலம் பூத்திருக்கும். கொடை க்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள இந்த பிரம்ம கமலபூவை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். சிலர் பூவின் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணை கவரும் வகையிலும் இந்த பிரம்மகமலபூ இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தெய்வத்தன்மை நிறைந்த இப்பூ பிரம்மாவிற்கு உகந்த பூவாக கருதப்படுகிறது.

    ஆண்டு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் தற்போது பூத்து குலுங்குறது. அந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். #BrahmaKamalamFlower

    வாழப்பாடி:

    எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்’ என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம், இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் தகவமைப்பு கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், பிரம்ம கமலம் மலர்கள் பூக்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

    இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தகவமைப்பு பெற்றுள்ள கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை சமீபகாலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஆத்தூரில் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி வி. ஜான்சி தோட்டக்கலைத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    இருவரும் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக மனோரஞ்சிதம், செண்பகம், நாகலிங்கம், பல்வலிப்பூண்டு, சீனி துளசி, அஸ்வகந்தா உள்ளிட்ட பல்வேறு அரிதாகி வரும் அரியவகை மூலிகை தாவரங்களை தேடிப்பிடித்து வளர்த்து வருகின்றனர். குறிப்பாக, ஆன்மீக தன்மை கொண்டதாக கருதப்படும் பிரம்ம கமலம் தாவரத்தை அந்தமானில் இருந்து கொண்டு வந்து, 6 ஆண்டுகளாக வீட்டு தோட்டத்தில் வளர்த்து வருகின்றனர்.

    அந்த தாவரத்தில் ஆண்டு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் தற்போது பூத்து குலுங்குறது. அந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். #BrahmaKamalamFlower

    ×