search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blue whale"

    • கரை ஒதுங்கியுள்ள நீல திமிங்கலம், அழுகும் நிலையில் இருப்பதால், இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம்.
    • மீனவர்களின் குழந்தைகள், திமிங்கலத்தை ஆர்வத்துடன் தொட்டுப் பார்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    பூமியில் உள்ள மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று நீல திமிங்கலம். இந்த இனம் அழிந்து வரும் உயிரினமாக கருதப்படுகின்றன. எனவே இதனை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் ஒரு நீல திமிங்கலம் நேற்று கரை ஒதுங்கி உள்ளது. சுமார் 50 அடி நீளம் கொண்ட இந்த நீல திமிங்கலம் கரை ஒதுங்கிய தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதி மீனவர்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். மீனவர்களின் குழந்தைகள், திமிங்கலத்தை ஆர்வத்துடன் தொட்டுப் பார்த்தனர்.

    சமீப காலங்களில் கோழிக்கோடு கடற்கரையில் இவ்வளவு பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது கரை ஒதுங்கியுள்ள நீல திமிங்கலம், அழுகும் நிலையில் இருப்பதால், இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோழிக்கோடு மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பலர் அங்கு விரைந்து வந்தனர். நீல திமிங்கலம் இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பிறகு ராட்சத குழி தோண்டி புதைப்பது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதே நேரம் திமிங்கலத்தின் உடல் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகே திமிங்கலம் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

    பூர்ணா, கபீஷ் கன்னா, பிர்லா போஸ், திவ்யா நடிப்பில் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் ‘புளூவேல்’ படத்தின் முன்னோட்டம். #Bluewhale
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளூவேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளூவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளூவேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே  வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.

    சமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா. அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.

    தொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் - T.ரங்கநாதன், இசை - PC ஷிவன், ஒளிப்பதிவு - KK, படத்தொகுப்பு - ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை -  NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரையும் பயமுறுத்திய புளூவேல் விளையாட்டு தற்போது சமூக திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. #BlueWhale
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளூவேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளூவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளூவேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.

    சமீப காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் பூர்ணா, இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.



    டி.ரங்கநாதன் இயக்கும் இப்படத்திற்கு பி.சி.ஷிவன் இசையமைக்கிறார். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
    ×