என் மலர்
நீங்கள் தேடியது "Bhumi Pooja for tar road construction"
- மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி பழனிச்சாமி நகர் பகுதியில், சாலை சில இடங்களில் மண் சாலையாக இருந்தது. இதனை தார் சாலையாக மாற்றித் தரும்படி அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், பொங்கலூர் ஊராட்சி நிதியின் மூலம் ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பழனிச்சாமி நகர் பகுதி முழுவதும் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
- 22-வது வார்டு கவுன்சிலர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சிவன் தியேட்டர் சாலை மற்றும் குறுக்கு சாலை தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பிலும், மாரியம்மன் லே-அவுட் முதல் வீதியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டிவெங்கடாசலம், 22-வது வார்டு கவுன்சிலர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் 21-வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி, 22-வது வார்டு செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






