search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharatanatyam show"

    • பவுர்ணமி பூஜை ,ஸ்ரீ உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • சாய்கிருஷ்ணா நுண்கலைகூடம் சார்பில் ஆருத்ரா தரிசன பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சி அண்ணாமலைகார்டன், திருமலை கார்டன் பகுதியில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இடுவாய் அழகிய பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3மணிக்கு ஸ்ரீஅண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பவுர்ணமி பூஜை ,ஸ்ரீ உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நடராஜர்- சிவகாமியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வேதிகா பூஜை, மாங்கல்யதாரணம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் , காலை 9 மணிக்கு சுவாமி திருவீதிஉலா நடைபெற்றது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஸ்ரீ உண்ணாமலை அம்பிகை சமேத ஸ்ரீ அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சன்ஸ்டார் , ஸ்ரீ எட்டுக்கையம்மன் குழுமம் மற்றும் சாய்கிருஷ்ணா நுண்கலைகூடம் சார்பில் ஆருத்ரா தரிசன பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    ×