search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "being bitten by bees"

    • மலைத்தேனீக்கள் சரஸ்வதி கடித்தது.
    • சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த பட்டகாரன்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் சம்பவத்தன்று தண்ணீர் காய வைக்க தென்னை மட்டையை எடுத்தார்.

    அப்போது அதில் இருந்த மலைத்தேனீக்கள் அவரை கடித்தது. அவருடை சத்தம் கேட்டு வந்த பேரன் குமரேசனையும் தேனீக்கள் கடித்தது.

    இதனையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×