search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bee. Jayakumar"

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவு
    • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர் பங்கஜ்குமார்ஜா, இயக்குனர் முத்துமீனா ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்த திட்டத்தின் விண்ணப்பத்துடன் ரேஷன்கார்டு, ஆதார், போட்டோ உட்பட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவற்றை துறைரீதியில் பதிவு செய்ய பல மாதமாகும். இந்த திட்டத்தை விரைவுபடுத்த அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில், எம்.எல்.ஏ. க்கள் நாஜிம், கல்யாண சுந்தரம், நாக தியாகராஜன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர் பங்கஜ்குமார்ஜா, இயக்குனர் முத்துமீனா ஆகியோர் பங்கேற்றனர்.

    ஒரு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யவே அரை மணிநேரம் தேவைப்படுகிறது. தேவையற்ற விதிமுறைகளை வகுத்து திட்டத்தை தாமதப்படுத்து கின்றனர் என எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அப்போது துறை இயக்குனர் முத்துமீனா, துறையில் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், அவுட்சோர்சிங் மூலமாகவோ, தேசிய தகவல் மையம் அல்லது, பொது சேவை மையங்கள் மூலமாகவோ 70 ஆயிரம் விண்ணப்ப ஆவணங்களை பதிவேற்றம் செய்து பயனாளிகளுக்கான அடையாள அட்டையை விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • அதிகாரிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவு
    • பொதுப்பணித் துறை சார்பில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    மங்களம் தொகுதி கீழ்சாத்தமங்கலம் பகுதியில் உள்ள குடுவை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறு வதற்காக பொதுப்பணித் துறை சார்பில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டப்பட்டு வருகிறது.

    இதற்கான பணிகளை கடந்த மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண் துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலம் வருவதற்குள் விரைவில் கட்டுமான பணிகளை முடித்து விவசா யிகள் பயன்பாட்டுக்கு அணையை கொண்டு வர பணிகளை துரிதப்படுத்த அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    அதிகாரிகளும் விரைவில் பணிகளை முடிப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து பங்கூர் பகுதி யில் உள்ள ஏரியை புனர மைக்கும் பணிகளையும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப் பணித்துறை அதிகாரிகள், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு
    • உழவர்களுக்கு இடு பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி மானியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23-ம் ஆண்டு நவரை பருவத்தில் நெல் மற்றும் பசும்தீவனப்புல் சாகுபடி செய்த உழவர்களுக்கு இடு பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி மானியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    இதன்படி 2022-23-ம் ஆண்டு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஆயிரத்து 755 பேருக்கு, 2 ஆயிரத்து 926 ஏக்கருக்கு ரூ.ஒரு கோடியே 46 லட்சத்து 31 ஆயிரத்து 200-ம், பசும்தீவனப்புல் சாகுபடி செய்த 153 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் 86 ஏக்கருக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 320ம், பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக அவர்களின் வங்கி கணக்கில் வேளாண்துறை சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • வாய்க்கால்களை சரி செய்வது, சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் பெங்களூரு தேசிய வேளாண் பூச்சி பணியகம் சார்பில் உயிரியல் முறையில் மரவள்ளி மாவு பூச்சி மேலாண்மை புதிய ஒட்டுண்ணி அனா கைரஸ் லோப்பசி வயல் வெளி வெளியீட்டு விழா நடந்தது.

    புதுவையை அடுத்த சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அனா கைரஸ் லோப்பசி ஒட்டுண்ணியை மரவள்ளி வயலில் வெளியிட்டு விவசாயிகளுக்கு வழங்கினார்.

    பெங்களூரு தேசிய வேளாண் பூச்சிவளர் பணியகம் மூத்த விஞ்ஞானி சம்பத்குமார் ஒட்டுண்ணியை எவ்வாறு வயல் வெளியில் விடுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பேசியதாவது:-

    புதுவையில் 100 நாள் வேலை திட்டத் தில் பணிபுரியும் வேலையாட்கள் குளங்களை தூர் வாருவது, வாய்க்கால்களை சரி செய்வது, சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் விவசாய பணிகளுக்கு வேலையாட்கள் கிடைக்காமல் பெரிதளவு பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது சம்பந்தமாக முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் பேசி விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு தேனீ.ஜெயக்குமார் பேசினார்.

    நிகழ்ச்சியில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன், பெங்களூரு தேசிய வேளாண் பூச்சி வள அமைவகம் முதன்மை விஞ்ஞானி சிவக்குமார், சைலேஷா வேளாண் அறிவியல் நிலைய. பூச்சிகள் வல்லுநர் விஜயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்

    • அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரிடம் பஞ்சாயத்தார் மனு
    • புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும், புதுநகர் அங்கன் வாடியை சொந்த இடத்தில் கட்டவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கணுவாப்பேட்டை கிராம பஞ்சாயத்து மக்கள் முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் தலைமையில் அமைச்சர் தேனீ.ஜெயக் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கணுவாப்பேட்டை கிராம பஞ்சாயத்தில் சாலை வசதி, கழிப்பிட வசதி, சுடுகாடு சுற்றுச்சுவர், 100 நாள் வேலை மூலம் ஆற்றங் கரை மேம்பாடு, தெரு விளக்கு, அடிப்படை வசதிகள் என தொகுதியில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் கணுவாப் பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்த நிலை யில் உள்ளது.

    அதன் கொள்ளளவு குறைவாக உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படு கிறது. எனவே அதிக கொள்ள ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும், புதுநகர் அங்கன் வாடியை சொந்த இடத்தில் கட்டவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    அங்காளம்மன் கோவில் எதிரே உள்ள குடிநீர் கீழ் நிலை நீர்தேக்க தொட்டியை சுற்றிலும் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும். சுத்திரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துத்தர வேண்டும். திருக்காஞ்சி மெயின்ரோட்டில் இருந்து புதுநகர் 3-வது பிளாட்டுக்கு செல்ல இணைப்பு சாலை வசதி செய்துதர தனியார் இடத்தை கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைத்து சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்:-

    இந்த சந்திப்பின்போது சந்திரகாசன், பெருமாள், தங்கராசு, சந்திரதரன், சுரேஷ், அரிகிருஷ்ணன், மோகன்தாஸ், சொக்க லிங்கம், பாலகிருஷ்ணன், பாபு, உமாபதி, வக்கீல் கார்த்திக், சீனிவாசன், நாகப்பன், வேணுகோபால், திருவேங்கடம், குமார், வைத்தியநாதன், அர்னால்டு முருகன், சல்வம், மணி, தணிகாசலம், வேலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ வேலை நடக்கிறது.
    • முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கணுவாபேட்டை, உருவையாறு ஆகிய 2 கிராமங்களில் உள்ள சாலை குளம் உள்ளிட்ட பகுதிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ வேலை நடக்கிறது.

    இந்த திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏவும், வேளாண்துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் தன்ராஜ், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    • ஆச்சாரியார் கல்விக் குழும தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட நலவாய்துறை, மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த மங்கலம் தொகுதி அரியூர் பகுதியில் உள்ள அரசு சுகாதாரம் மற்றும் நல வாழ்வு மையம் இயங்கி வருகிறது.

    இங்கு பல ஆண்டு காலமாக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

    இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதன் பேரில் தனியார் நிறுவன பங்காளிப்புடன் புதிய ஆம்புலன்ஸ் வசதி மற்றும் வாரந்தோறும்  இலவச பல் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடந்தது.

    அமைச்சருர் தேனீ. ஜெயக்குமார் இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலவச பல் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, ஆச்சாரியார் கல்விக் குழும தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட நலவாய்துறை, மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் கிராமமக்கள் வலியுறுத்தல்
    • 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    மங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பபட்ட திருக்காஞ்சியில் இணைப்பு கால்வாயை ரூ.12 1/4 லட்சத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.

     இந்த பணியை அமைச்சர் தேனீஜெயக்குமார்  தொடங்கி வைத்தார். அப்பகுதி கிராம மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர்கள், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

    பிற மாநிலங்களில் வழங்கப்படுவது போல ரூ.280 கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக்பாகி, உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர்கள் ராமநாதன், செங்கதிர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×