search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நவரை பருவ விவசாயிகளுக்கு வங்கிகளில் உற்பத்தி மானியம்
    X

    கோப்பு படம்.

    நவரை பருவ விவசாயிகளுக்கு வங்கிகளில் உற்பத்தி மானியம்

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு
    • உழவர்களுக்கு இடு பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி மானியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23-ம் ஆண்டு நவரை பருவத்தில் நெல் மற்றும் பசும்தீவனப்புல் சாகுபடி செய்த உழவர்களுக்கு இடு பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி மானியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    இதன்படி 2022-23-ம் ஆண்டு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஆயிரத்து 755 பேருக்கு, 2 ஆயிரத்து 926 ஏக்கருக்கு ரூ.ஒரு கோடியே 46 லட்சத்து 31 ஆயிரத்து 200-ம், பசும்தீவனப்புல் சாகுபடி செய்த 153 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் 86 ஏக்கருக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 320ம், பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக அவர்களின் வங்கி கணக்கில் வேளாண்துறை சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

    Next Story
    ×