search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாய பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை-அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்
    X

    அனா கைரஸ் லோப்பசி ஒட்டுண்ணியை மரவள்ளி வயலில் வெளியிட்டு விவசாயிகளுக்கு அமைச்சர் தேனீ.ெஜயக்குமார் வழங்கிய காட்சி.

    விவசாய பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை-அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • வாய்க்கால்களை சரி செய்வது, சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் பெங்களூரு தேசிய வேளாண் பூச்சி பணியகம் சார்பில் உயிரியல் முறையில் மரவள்ளி மாவு பூச்சி மேலாண்மை புதிய ஒட்டுண்ணி அனா கைரஸ் லோப்பசி வயல் வெளி வெளியீட்டு விழா நடந்தது.

    புதுவையை அடுத்த சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அனா கைரஸ் லோப்பசி ஒட்டுண்ணியை மரவள்ளி வயலில் வெளியிட்டு விவசாயிகளுக்கு வழங்கினார்.

    பெங்களூரு தேசிய வேளாண் பூச்சிவளர் பணியகம் மூத்த விஞ்ஞானி சம்பத்குமார் ஒட்டுண்ணியை எவ்வாறு வயல் வெளியில் விடுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பேசியதாவது:-

    புதுவையில் 100 நாள் வேலை திட்டத் தில் பணிபுரியும் வேலையாட்கள் குளங்களை தூர் வாருவது, வாய்க்கால்களை சரி செய்வது, சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் விவசாய பணிகளுக்கு வேலையாட்கள் கிடைக்காமல் பெரிதளவு பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது சம்பந்தமாக முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் பேசி விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு தேனீ.ஜெயக்குமார் பேசினார்.

    நிகழ்ச்சியில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன், பெங்களூரு தேசிய வேளாண் பூச்சி வள அமைவகம் முதன்மை விஞ்ஞானி சிவக்குமார், சைலேஷா வேளாண் அறிவியல் நிலைய. பூச்சிகள் வல்லுநர் விஜயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×